என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐஐடி"

    • தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும்
    • மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models

    சென்னை ஐஐடி உட்பட இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏஐ மையங்களை மேம்படுத்த கூகிள் நிறுவனம் ரூ.72 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு IISc-யில் உள்ள TANUH-க்கும், கான்பூரில் உள்ள Airawat Research Foundation-க்கும், IIT Madras-ல் உள்ள AI Centre of Excellence for Education-க்கும், IIT Ropar-ல் உள்ள ANNAM.AI-க்கும் இந்த நிதி பகிரப்படும். நேற்று (டிச.16) நடைபெற்ற கூகுளின் 'Lab to Impact' உரையாடலில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்துகொண்டார்.


    டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு2026-ல் இந்த அறிவிப்பு வெளியானது

    மேலும் கூகுள் தனது மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models- ஐ உருவாக்குவதற்கு $400,000 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 30 லட்சம்) வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தோல் மருத்துவம் மற்றும் OPD வகைப்பாட்டிற்கான AI கருவிகளை உருவாக்க , அஜ்னா லென்ஸ் (ஸ்டார்அப் நிறுவனம்) எய்ம்ஸ் நிபுணர்களுடன் இணைந்து செயல்படும். IISc ஆராய்ச்சியாளர்கள் இதன் மருத்துவ பயன்பாடுகளை ஆராய்வர்.   

    • விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பாட்நகர், விஞ்ஞான் டீம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
    • விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பாட்நகர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை ஐஐடி-யை சேர்ந்த 3 பேராசிரியர்கள் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..

    மோகனசங்கர் சிவப்பிரகாசம், பிரதீப், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய பேராசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திய சிறந்த சாதனைகள் மற்றும் வாழ்நாள் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் வழங்கப்படுகிறது.

    இந்த விருது விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பாட்நகர், விஞ்ஞான் டீம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

    வேதியியல் துறையைச் சேர்ந்த பிரதீப் விஞ்ஞான் ஸ்ரீ விருதுக்கும், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ட்ஸ் மற்றும் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த ஸ்வேதா பிரேம் அகர்வால் விஞ்ஞான் யுவா- சாந்தி ஸ்வாரப் பட்நகர் விருதுக்கும் தேர்வு செய்யபப்பட்டுள்ளனர்.

    • தரவரிசை பட்டியலில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் 2 ஆம் இடம் பிடித்துள்ளன.
    • மும்பை ஐ.ஐ.டி. நிறுவனம் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளன.

    தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை: சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், மும்பை ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன.

    ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 6 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.

    • மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
    • ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.

    ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.

    இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.

    இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில், மாணவி ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!

    அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

    ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் #IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது.
    • பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    வாழப்பாடி:

    சேலத்தில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் கல்வராயன் மலை அமைந்துள்ளது. இங்குள்ள கருமந்துறை பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆண்டி. டெய்லர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்ககிரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆண்டி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவரது மகன் ஸ்ரீ கணேஷ் தந்தையின் தொழிலான டெய்லரிங் வேலை செய்து வருகிறார். 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்தார். மாணவி ராஜேஸ்வரி 10-ம்வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்றார்.



    கருமந்துறையில் வசித்து வரும் மாணவியின் வீடு. 

    ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது.
    • அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம்.

    சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.

    அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளைப் பார்த்தால், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக உயர்ந்த வளர்ச்சியை காட்டியுள்ளது.

    பொருளாதாரத்தில் தற்போது முதல் நான்கு இடத்தில் இருக்கும் நாடுகளில் மூன்று நாடுகள் நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 2021-ல், நாம் ஐந்தாவது இடத்தில் இருந்தோம்.

    அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம். 2028-ல் நாம் மூன்றாவது இடத்தில் இருப்போம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047-ல் இந்தியா 1 அல்லது 2-வது நாடாக மாறும். நமது சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டில் இது நடக்கும்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    • கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • 54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது.

    இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-ல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.

    இதுகுறித்து அப்துஸ் சமது கூறுகையில், "54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யமுடியும்" என்றார்.

    • மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது.
    • மாணவருக்கு பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம்

    சென்னை:

    சென்னை ஐஐடி-யில் பி.டெக். மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அந்த மாணவர் அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மாணவருக்கு அவரது படிப்பில் கவனம் செலுத்துவது மற்றும் பாடங்களை படித்து முடிப்பதில் சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    சென்னை ஐஐடியில் ஒரு மாதத்தில் இரண்டாவது மாணவர் தற்கொலை செய்துள்ளார். கடந்த மாதம் 14ம் தேதி முதுகலை மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் தறகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

    மாணவர் இறப்பு குறித்து ஐஐடி சென்னை ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி உள்ளது.

    • அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    • இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன.

    சென்னை :

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 65-வது இடத்திலும், கோவை வேளாண் பல்கலைக்கழகம் 93-வது இடத்திலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 94-வது இடத்திலும் என தமிழ்நாட்டில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்று உள்ளன.

    ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 5-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 7 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.

    பல்கலைக்கழகங்களின் பட்டியலில், பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21-வது இடத்திலும், சென்னை பல்கலைக்கழகம் 50-வது இடத்திலும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

    கல்லூரிகளைப் பொறுத்தவரையில், டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்வி நிறுவனம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதில் சென்னை மாநிலக் கல்லூரி 3-வது இடத்திலும், லயோலா கல்லூரி 7-வது இடத்திலும் என தமிழ்நாட்டை சேர்ந்த 35 கல்லூரிகள் இடத்தை தக்க வைத்திருக்கின்றன.

    என்ஜினீயரிங் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. முதலாவது இடத்திலும், திருச்சி என்.ஐ.டி. 9-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் என மொத்தம் 15 என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துள்ளன.

    மருத்துவக் கல்லூரி வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3-வது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்திலும் என 8 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இதேபோல், ஆராய்ச்சி பிரிவில் 9 கல்வி நிறுவனங்களும், மேலாண்மை பிரிவில் 10 கல்லூரிகளும், துணை மருத்துவத்தில் 9 கல்வி நிறுவனங்களும், பல் மருத்துவத்தில் 7 கல்லூரிகளும், சட்டப்படிப்பில் 2 கல்வி நிறுவனங்களும் கட்டிடம் மற்றும் திட்டமிடல் பிரிவில் 3 கல்லூரிகளும், வேளாண்மை சார்ந்த படிப்புகளில் 5 கல்வி நிறுவனங்களும், புதுமையான கண்டுபிடிப்புகளில் 2 கல்லூரிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களாக இடம்பெற்று அசத்தி இருக்கின்றன.

    கடந்த ஆண்டுகளுடன் இந்த ஆண்டு தரவரிசை பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பட்டியலில் நல்ல முன்னேற்றம் கண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது:-

    சென்னை ஐ.ஐ.டி.யின் சிறந்த தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஊழியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் முன்னாள் மாணவர்களின் அசைக்க முடியாத ஆதரவின் ஓய்வில்லாத முயற்சி போன்றவற்றாலேயே இது (தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு பட்டியலில் முதல் இடம்) சாத்தியமாகியிருக்கிறது.

    எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கல்வி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்யவேண்டும் என்பதை எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம். சென்னை ஐ.ஐ.டி.யை உள்நாட்டில் பொருத்தமானதாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாகவும் உருவாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது.
    • கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று காலை வெளியிட்டு உள்ளது.

    இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.

    அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், "உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகத்தை முதல் 300 இடங்களுகு்குள் கொண்டு வருவதே இலக்கு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகம் ஆகும்.
    • 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    சென்னை :

    சென்னை ஐ.ஐ.டி., அதனுடன் இணைந்து செயல்படும் முன்னாள் மாணவர்கள், தொழில்துறையினர், தனிப்பட்ட நன்கொடையாளர்கள் ஆகியோரிடம் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.231 கோடியை 2022-23-ம் ஆண்டில் திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதி ஆண்டில் திரட்டப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். நிதி திரட்டலை பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியை இப்போது பதிவு செய்துள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டு திரட்டப்பட்ட நிதி ரூ.101.2 கோடியாகும்.

    ரூ.1 கோடிக்கு மேல் இந்த கல்வி நிறுவனத்துக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூக பொறுப்புணர்வு திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

    சென்னை ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சி பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்று காரணமாக முந்தைய ஆண்டு நடைபெறாமல் இருந்த 'பேட்ச்' மாணவர்கள் சந்திப்பு கடந்த ஆண்டு நடந்தபோதும் நிதி பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.

    இதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஐ.ஐ.டி.யின் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், "சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பின் கல்வி பயிலும் மாணவர்கள் மீது காட்டும் அன்பும், பாசமும் நெகிழச்செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவானது சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. அவர்களின் நீடித்த ஆதரவுடன் வரும் ஆண்டுகளில் சென்னை ஐ.ஐ.டி.யை இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்வோம்" என்றார்.

    இதேபோல, சென்னை ஐ.ஐ.டி.யின் சமூகம் சார்ந்த திட்டங்கள் எவ்வாறு நாட்டுக்கு பயனளிக்கின்றன என்பது குறித்து, சென்னை ஐ.ஐ.டி. இன்ஸ்டிடியூசனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி கவிராஜ் நாயர் விளக்கினார்.

    • நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.
    • வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    சென்னை:

    இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில் நுட்பம் நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    சமீபத்தில் ஒடிசா தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. பல்வேறு துறைகளில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை செயல்படுத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் இதை தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

    செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை சுப்ரீம் கோர்ட்டில் செயல்படுத்த உள்ளோம். நவீன தொழில் நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயணிக்க வேண்டும்.

    வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில் நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    காணொலி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×